2019 உலகக்கோப்பை தொடரில் மனதை உலுக்கிய சம்பவங்கள்

heartbreaking moments of the tournament
heartbreaking moments of the tournament

கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த 12வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் முடிவு பெற்றது. மிகவும் பரபரப்பான நேற்றைய இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின. சூப்பர் ஓவரிலும் டையில் முடிந்த நேற்றைய ஆட்டத்தின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்தது. இதன் மூலம் 44 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. தொடரின் முற்பாதியில் பெரும்பாலான போட்டிகள் ஒரு அணிக்கு சாதகமாக முடிந்தது. அதன் பின்னர், சில ஆட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டன. தொடரின் பிற்பாதியில் தான் ஒவ்வொரு ஆட்டமும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஏனெனில், அரையிறுதிப் தகுதி பெற ஒவ்வொரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. எனவே, நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மனதை உலுக்கிய சில சம்பவங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#3.நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிராத் வெயிட்டின் தைரியமான போராட்டம்:

It was a case of so near yet so far for Brathwaite and the Windies on that night
It was a case of so near yet so far for Brathwaite and the Windies on that night

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பென் ஸ்டோக்சின் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு கிரிக்கெட் உலகிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் கார்லோஸ் பிராத்வெயிட். இவரின் அட்டகாசமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது உலக கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது. இதனால், உலகளவில் பெயர் பெற்ற இவர், நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றார். லீக் சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 292 ரன்கள் குவித்து வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கியது, வெஸ்ட் இண்டீஸ். இருப்பினும், 142 ரன்களை எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னரும் இந்த அணியின் ஊசலாடும் ஆட்டமே தொடர்ந்தது. ஏனெனில், அடுத்த 22 ரன்கள் எடுப்பதற்கு முன்னே 3 விக்கெட்களை இந்த அணி இழந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதன் பின்னர், களமிறங்கிய பிராத்வெயிட் பந்துவீச்சாளரான கெமர் ரோச்சுடன் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டு 47 ரன்களை சேர்த்தார்.

இதனையடுத்து கெமர் ரோச்சும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த வேலையில், காட்ரெல் உடன் கை கோர்த்து அரக்கத்தனமான சிக்சர்களை வெளுத்து வாங்கினார், பிராத்வெய்ட். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் 47 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டத்தின் 48 வது ஓவரில் 25 ரன்களை சேர்த்தார். அதன்பின்னர், கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்மி நீசம் வீசிய 49 ஆவது ஓவரில் முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிராத் வெயிட் சிக்சரின் மூலம் ஆட்டத்தை முடிக்க முற்பட்டாற். 49வது ஓவரில் லாங் ஆன் திசையில் பேட்டை உயர்த்தி சிக்சரை அடித்த போதும் நூலிழையில் கேட்ச் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 82 பந்துகளில் 101 ரன்களை குவித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார், பிராத்வெய்ட்.

#2.இந்தியா Vs நியூசிலாந்து, அரையிறுதி ஆட்டம்:

This is sure to become one of the iconic images of the World Cup
This is sure to become one of the iconic images of the World Cup

இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் கடந்த வாரம் மோதின. முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்திருந்தபோது மழை வந்து குறுக்கிட்டது. இதனால் மீண்டும் ஆட்டத்தை அந்நாளில் தொடர முடியவில்லை. எனவே, ஆட்டம் அடுத்த நாளை நோக்கி தள்ளிப்போனது. இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் மீதமிருந்த ஓவர்களில் பேட்டிங் செய்து 240 என்ற இலக்கை நிர்ணயித்தது, நியூசிலாந்து. எனவே, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, எவரும் எதிர்பார்த்திராத வகையில் தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியின் திறமையான வியூகங்களால் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா ஒரு ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 3 விக்கெட்களை இழந்த பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ஓரளவுக்கு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆனால், மீண்டும் ஒரு விக்கெட் இழப்பாக தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் காலி செய்தார். மீண்டும் இந்திய அணியின் பேட்டிங் கவலைக்குரிய வகையில் அமைந்தது. இதனால், ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய பேண்ட் மற்றும் பாண்டியா ஜோடி நிதானமாக விளையாடி ஓரளவுக்கு சரிவிலிருந்து அணியை மீட்டது.

இருப்பினும் இவர்களின் விக்கெட்களை இழந்த பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் தோனி இணை ஆட்டத்தின் போக்கை சற்று மாற்றியது. ஏழாம் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 106 ரன்களை சேர்த்தனர். ரவிந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து முக்கியமான 48 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த மகேந்திர சிங் தோனி ரன் அவுட் செய்யப்பட்டார். இதற்கு அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் எனக்கருதி இறுதி ஆட்டத்தின் மொத்த டிக்கெட்டுகளில் 29 சதவீதத்தை இந்திய ரசிகர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கை அனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டது.

#1.மனமுடைந்த மார்ட்டின் கப்டில்:

Black Caps batsman Martin Guptill
Black Caps batsman Martin Guptill

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமது அபாரமான ரன் அவுட் மூலம் தோனியை ஆட்டமிழக்கச் செய்த மார்ட்டின் கப்டில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தேவையில்லாமல் ஒவ்வொரு ஓவர் த்ரோவ் மூலம் 4 ரன்களை அள்ளித் தந்தது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சற்று சாதகமாக முடிந்தது. அதுமட்டுமல்லாமல் நேற்று நடைபெற்ற ஆட்டம் டையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 16 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதன் பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் இரு ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டு ஜோஸ் பட்லர் மூலம் அபாரமாக மாட்டின் கப்தில் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பின்னர், களத்திலேயே மார்ட்டின் கப்தில் கதறிய காட்சி கிரிக்கெட் உலகையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைக்கூட கேலி செய்யும் வகையில் ரசிகர்கள் சிலர் அரையிறுதி ஆட்டத்தில் தோனியை ரன் அவுட் செய்த மாட்டின் கப்பில் ரன் அவுட் மூலம் தனது விக்கெட்டை இழந்ததால், கர்மா தனது பணியை செய்துள்ளது என விமர்சித்து வருகின்றனர்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now