2019 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கான 3 காரணங்கள்

India vs Pakistan
India vs Pakistan

#2 ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டது

Pakistan missed a few crucial runouts
Pakistan missed a few crucial runouts

பாகிஸ்தான் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான நெருக்கடியான போட்டியில் பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவிற்கு ஃபீல்டிங் செய்யவில்லை. லோகேஷ் ராகுல் வாஹாப் ரியாஜ் வீசிய 10வது ஓவரின் முதல் பந்தை மைதானத்தின் இடப்பக்க மூலையில் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். இங்கு ராகுலிடமிருந்து எந்த அழைப்பும் இன்றி ரோகித் சர்மா இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்தார். ஃபக்கர் ஜமான் ஸ்ட்ரைக்கில் வீசாமல் நான்-ஸ்ட்ரைக்கில் பந்தை எடுத்து வீசிய காரணத்தால் ரோகித் சர்மா காப்பற்றப்பட்டார்‌.

அடுத்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு நெருக்கடியான சமயத்தில் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது ஷதாப் கான் எடுத்து ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து ஸ்டம்பில் அடிக்காததால் ரோகித் காப்பற்றப்பட்டார். இந்த இரு மிஸ் ஃபில்டிங் ஆட்டத்தை மாற்றி, ரோகிதிற்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசினார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக 7வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

#3 சஃப்ரஸ் அகமது கேப்டன்ஷீப்

Sarfraz Ahmed
Sarfraz Ahmed

பாகிஸ்தான் அணியில் சஃப்ரஸ் அகமதுவின் கேப்டன்ஷீப் பற்றி பல கேள்விகள் எழுந்து வருகின்றன. தற்போது இப்போட்டியில் அவர் எடுத்த தவறான முடிவுகளை கண்டு மேன்மேலும் கேள்விகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் வலிமையே பௌலிங் மற்றும் அதிக ரன்களை சேஸ் செய்யும் போது ஒரு நிலையான ஆட்டம். ஆனால் ஒரு அதிக நெருக்கடியான போட்டியில் இந்திய பேட்டிங் லைன்-அப்பிற்கு எதிராக சஃப்ரஸ் அகமது டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது மிகவும் தவறானதாகும்.

இவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால், இவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிக திருப்பம் இருந்ததை நாம் காண முடிந்தது. பவர் பிளே ஓவரில் வஹாப் ரியாஷிற்கு 2 ஓவர்களை மட்டுமே அளித்தார். அத்துடன் ஷதாப் கான் ஆட்டத்தின் 23 ஓவர்கள் வரை வீசிய அனைத்து ஓவர்களிலுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்டது. 24வது ஓவரில் வஹாப் ரியாஷை எடுத்து வந்து இந்திய அணிக்கு ஒரு விக்கெட் இழப்பை ஏற்படுத்தினார்‌. ஆனால் அந்த சூழ்நிலையில் இந்தியா ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து விளையாடி விட்டது.

Quick Links