2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாசிம் அம்லா மற்றும் குவின்டன் டிகாக்கை விக்கெட்டுகளை ஆட்டத்தின் ஆரம்பத்திலே ஜாஸ்பிரிட் பூம்ரா வீழ்த்தினார்.
இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாட முற்பட்ட போது சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த போது கிறிஸ் மோரிஸ் மற்றும் காகிஸோ ரபாடா ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை 227ஆக உயர்த்தினர்.
ஒரு சுமாரான இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவானை, காகிஸோ ரபாடா வெளியேற்றினார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பியபோது, கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுலுடன், ரோகித் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் எம்.எஸ்.தோனியுடனும் இனைந்து ரோகித் விளையாடினார். இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிறப்பான சதத்தினை விளாச, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து வைத்தார்.
ரோகித் சர்மா 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை விளாசினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இருப்பினும் விராட் கோலியின் அற்புதமான கேப்டன்ஷீப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நாம் இங்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகளை பற்றி காண்போம்.
#3 அணித் தேர்வு
உலகக் கோப்பையில் விராட் கோலி இந்திய அணியை எவ்வாறு தேர்வு செய்வார், மற்றும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் பல நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்து வந்தது. அத்துடன் அவ்வப்போது நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது நம்பிக்கை வீரர்களை தெரிவிப்பார். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை விராட் கோலி நம்பி இந்திய ஆடும் XI-ல் தேர்வு செய்தார். கோலியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு சற்று வெறுப்பை ஏற்படுத்தியது அத்துடன் இது தவறான முடிவாக அமையப் போகிறது என அனைத்து ரசிகர்களும் எண்ணியிருந்தனர்.
புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ராவுடன் சேர்ந்து அதிரடி பந்துவீச்சை தொடக்கத்தில் வெளிபடுத்தினார். குல்தீப் யாதவும் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் அணித்தேர்வை ரசிகர்கள் வெறுத்து வந்தனர். ஆனால் இந்தப் போட்டியில் அவரின் அணித்தேர்வு சிறப்பானதாக இருந்தது. விராட் கோலி தான் தேர்வு செய்யும் ஆடும் XI தவறாக அமையாது என நிருபித்துள்ளார்.