உலக கோப்பை தொடரின் பரபரப்பான ஆட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது, இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்று ஒருமுறைகூட தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது இந்திய அணி. முதலில் டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது. இதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து அசத்தியது. இதில் குறிப்பிடும் வகையில், தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 113 பந்துகளை சந்தித்து 140 ரன்களை குவித்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 337 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இனிங்ஸில் 40 ஓவர்களில் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. டி.எல்.எஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 302 ரன்களை குவித்து இருக்கவேண்டும். ஆனால், 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை மட்டுமே குவித்து தடுமாறி இருந்த பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியால் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் ராகுல் இணை முதல் விக்கெட்டிற்கு 136 ரன்களை சேர்த்தது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டின் அதிகபட்ச இந்திய அணியின் பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. தனது விக்கெட்டை இழந்த ராகுல் 77 பந்துகளை சந்தித்து 57 ரன்களைக் குவித்திருந்தார். ரோகித் சர்மா உடன் இணைந்த கேப்டன் விராட் கோலி தனது பணியை அற்புதமாக செய்தார். கேப்டனும் துணை கேப்டனும் இணைந்து சரவெடி தாக்குதலை தொடங்கினர். இதனையடுத்து, களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி 336 ரன்களை தொட்டது.
இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விஜய் சங்கரின் பந்துவீச்சில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. பாபர் அஸம் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோரின் நல்ல பார்ட்னர்ஷிப்பில் இலக்கை துரத்திக் கொண்டிருந்தது, இருப்பினும், குல்தீப் யாதவின் அபார சுழற்பந்து வீச்சு தாக்குதலால் எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டை இழந்தார், பாபர் அசாம். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தொடர்ந்து தங்களது விக்கெட்டை இழந்த வண்ணம் இருந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற விராட் கோலி கையாண்ட மூன்று யுக்த்திகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.