உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்

One of the long-lasting memories of India-Pakistan encounter
One of the long-lasting memories of India-Pakistan encounter

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7வது முறையாக 2019 ஜீன் 16 ஞாயிறு அன்று மோத உள்ளன. கடந்த 6 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தனது சொந்த கண்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து கண்டங்களிலும் வீழ்த்தியுள்ளது. இந்திய அணி அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது.

இந்திய 1975 மற்றும் 1979 ஆண்டுகளில் மிகவும் மோசமான ஆட்டத்துடன் இருந்தது. அந்த சமயத்தில் உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ளவில்லை. 1983ல் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய போது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் தகுதிப் பெற்றிருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளினால் அரையிறுதியில் பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது.

1987ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி தகுதிச் சுற்றில் நியூசிலாந்திற்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லாகூரில் நடைபெற இருந்த இந்திய-பாகிஸ்தான் போட்டியை தடுத்தது. இருப்பினும் இரு அணிகளுமே அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளால் வெளியேற்றப்பட்டன.

உலகக் கோப்பை தொடரை நடத்துபவர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் ஒளிபரப்பாளர்கள் என அனைவருமே அனைத்து உலகக்கோப்பை போட்டிகளின் தகுதிச் சுற்றிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர்.

அதன்படி சிட்னியில் நடந்த 1992 உலகக் கோப்பை தொடரிலிருந்து தொடங்கி, 1996, 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. 2007 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார விதமாக வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. அயர்லாந்து அணி முதன்மை சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

2011 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உலகக் கோப்பை தொடரில் நடந்தது, அத்துடன் 2015 உலகக் கோப்பை தொடரிலும் தொடர்ந்தது. தற்போது பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை தொடரில் 7வது முறையாக மோத உள்ளன. இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே தழுவாத இந்திய அணி சற்று நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த சாதனையை தொடர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.

2019 உலகக் கோப்பை தொடர் முழுவதும் மழை மற்றும் அதிக ஈரப்பதத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது உலகக் கோப்பை மீது ரசிகர்கள் வைத்திருந்த ஆர்வத்தை பாழ் படுத்துகிறது. மழைக் காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் பாதிப்படைவதால் ரசிகர்கள் அதிகம் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இது உலகக் கோப்பை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது போல் உள்ளது.

நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் சிறந்த 3 போட்டிகள் பற்றி காண்போம்.

#3 குழு சுற்று, சென்சூரியன்,2003

Sachin played the best innings by an Indian batsman against Pakistan in a World Cup encounter
Sachin played the best innings by an Indian batsman against Pakistan in a World Cup encounter

இந்திய அணி 2003 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 6 சுற்றில் செஞ்சூரியனில் பாகிஸ்தானிற்கு எதிராக மோதியது. இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் மோதும் முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை தவிர இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கிட்டத்தட்ட அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்திய அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் களமிறங்கியது.

பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் இப்போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

ஷாய்ட் அன்வரின் சிறப்பான சதத்தின் மூலம் பாகிஸ்தான் 273 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. சற்று அதிகப்படியான இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் விரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர், வாஹார் யோனிஷ் போன்ற சிறப்பான பந்துவீச்சை சரியாக எதிர்கொண்டு அதிரடி துவக்கத்தை அளித்தனர்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியை வெளிபடுத்தும் மனநிலையில் இருந்தனர். இரண்டாவது ஓவரை வீச வந்த சோயிப் அக்தர் வீசிய முதல் பந்தில் சச்சின் டெண்டுல்கர் சிகஸரும், அடுத்த இரு பந்துகளில் இரு பவுண்டரிகளையும் விளாசினர். இதைத்தொடர்ந்து விரேந்தர் சேவாக்கும் வாஹார் யோனிஷ் வீசிய ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசினார்.

வாஸீம் அக்ரமை பந்து வீச களமிறக்கவில்லை. இந்திய அணி முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களை குவித்தது. சேவாக் விக்கெட் வீழ்ந்த பின் கங்குலி அந்த பொறுப்பை ஏற்று விளையாடினார். பின்னர் முகமது கைப் களமிறங்கி பொறுப்பான மற்றும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரமித்தார்.

சச்சின் டெண்டுல்கர் தனது அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்து 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். வாஸிம் அக்ரம் தான் வீசிய முதல் ஓவரில் 18 ரன்களை வழங்கினார். பின்னர் இரண்டாவது ஓவரை வீச களமிறங்கினார். சச்சின் டெண்டுல்கர் இவர் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் 18 ரன்களை குவித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது.

சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களில் இருந்த போது வாஸிம் அக்ரம் வீசிய ஷார்ட் பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இருப்பினும் இந்திய அணி 28 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சினின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்.

யுவராஜ் சிங் அரைசதம் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். ராகுல் டிராவிட் 44 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றது. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அதிரடி இன்னிங்ஸ் மற்றும் சேவாக்கின் சிறந்த தொடக்க ஆட்ட பங்களிப்பு சிறப்பாக வெளிபட்டது.

#2 காலிறுதி, பெங்களூரு, 1996

Venkatesh Prasad - The hero of India's win against Pakistan in World Cup 1996
Venkatesh Prasad - The hero of India's win against Pakistan in World Cup 1996

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரில் நடந்த காலிறுதியில் 1996 உலகக் கோப்பை தொடரில் மோதின. உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றில் மோதின. 1992 உலகக் கோப்பை சேம்பியன் பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா வென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்திய அணி தனது சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. இது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரு அணிகளும் பெங்களூருவில் நடந்த இப்போட்டியில் மோதின.

இந்திய இப்போட்டியை மிகவும் சிறப்பாக தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாஸீம் அக்ரமிற்கு காயம் ஏற்பட்டதால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். இதனால் பாகிஸ்தான் கேப்டன் ஆமீர் சோஹாலி பந்து வீச்சை மேற்கொண்டார். பாகிஸ்தான் அணி ஒரு முக்கிய டாஸ் வெல்லும் வாய்ப்பை இழந்து கடும் வெயிலில் ஃபீல்டிங் செய்ய அனுப்பப்பட்டது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நவ்ஜோட் சித்து மற்றும் சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை குவித்தனர். பின்னர் சச்சின் டெண்டுல்கர் அதா-ஊர்-ரெக்மானால் வீழ்த்தப்பட்டார். சித்து நிலைத்து விளையாடி 93 ரன்களை குவித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் 250 அல்லது அதற்கு குறைவான ரன்களிலேயே வீழ்த்தி விடும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அஜய் ஜடேஜா, வாஹார் யோனிஷ் பந்துவீச்சை சிதறடித்து கடைசி இரு ஓவர்களில் 40 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் வாஸீம் அக்ரமின் யாரக்கரை டெத் ஓவரில் அதிகமாக மிஸ் செய்தது. அனில் கும்லே மற்றும் ஜவஹால் ஶ்ரீ நாத் ஆகியோரும் இந்திய அணியின் இக்கட்டான சூழ்நிலையில் இரு சிக்ஸர்களை விளாசினர். இந்திய அணி கடைசி 4 ஓவரில் 57 ரன்களை விளாசி 287 ரன்களை பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் பதிலடி தரும் விதமாக முதல் 10 ஓவர்களில் 87 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சையித் அன்வரை, ஶ்ரீநாத் வீழ்த்தினார். பாகிஸ்தான் 113 ரன்களில் 1 விக்கெட்டை இழந்திருந்த போது பாகிஸ்தான் கேப்டன் ஆமேர் சொஹாய்ல் பவுண்டரி விளாசிய பின் வென்கடேஷ் பிரசாந்திடன் மோதலில் ஈடுபட்டதால் தனது மனநிலையை சற்று இழந்தார். அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாந்த் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதற்கு பிறகு லீஜா ஜவாத் மற்றும் இன்ஜ்மாம்-உல்-ஹக் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார் வெங்கடேஷ் பிரசாந்த். இதனால் சலீம் மாலிக் மற்றும் ஜவாட் மியாலேன்ட் ஆகியோரால் சற்று கடின இலக்கை அடைய நிலைத்து விளையாட இயலவில்லை. இறுதியாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா புகழ்பெற்ற வெற்றியை பதிவு செய்தது.

#1 அரையிறுதி, மொஹாலி, 2011

Yuvraj Singh came good with the ball against Pakistan at Mohali
Yuvraj Singh came good with the ball against Pakistan at Mohali

இந்திய அணி 2011 உலகக் கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை சந்தித்து. டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

உமர் குல்லின் வேகப்பந்து வீச்சை சரியாக எதிர்கொண்டு இவரது இரண்டாவது ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்கும் முன்பாக சேவாக் 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார்‌. சச்சின் டெண்டுல்கர் தனது அதிரடியை பாகிஸ்தானிற்கு எதிராக வெளிபடுத்த தவறவில்லை. 4 முறை இவரது கேட்ச் தவறப்பட்டது அத்துடன் இரு முறை DRS மூலம் காப்பற்றப்பட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்தார்.

மகேந்திர சிங் தோனி (25) மற்றும் சுரேஷ் ரெய்னாவின்(36) சிறப்பான ஆட்டத்தால் 260 என்ற சற்று கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களில் தடுமாறியது. அஷாத் சஃபிக் மற்றும் யோனிஷ் கான் ஆகியோரை யுவராஜ் சிங் தனது மாயாஜால சுழலினால் வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உமர் அக்மல் மற்றும் கேப்டன் ஷாஹீத் அப்ரிடியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மிஸ்பா-உல்-ஹக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவர் வரை நிலைத்து விளையாடினார். ஆனால் இந்தியா நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியாக இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links