2. மெஸ்ஸிக்கு இருந்த வளர்ச்சி குறைபாட்டால் அவரின் கால்பந்து வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்....
குழந்தைப் பருவத்திலிருந்தே மெஸ்ஸிக்கு வளர்ச்சி குறைபாடு இருந்ததை அவரது பெரும்பாலான ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம், இந்த குறைபாட்டால் அவரது கால்பந்து வாழ்க்கையே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக அவருக்கு பல உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன. கால்பந்து தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால் தினமும் இரவில் ஹார்மோன் வளர்ச்சிக்கான ஊசியை காலில் போட வேண்டும்.
ஆனால் இது செலவு மிகுந்த சிகிச்சை. மெஸ்ஸியின் குடும்பத்தாலும், அவர் அப்போது விளையாடிக் கொண்டிருந்த நெவல்ஸ் ஓல்ட் கிளப்பாலும் இவ்வுளவு தொகையை செலவழிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் தான் சிகிச்சைக்கான முழு தொகையும் ஏற்றது பார்சிலோனா அணி. இந்த ஒரு காரணத்திற்கக தான் தனது நாட்டை விட்டு பார்சிலோனாவிற்கு சென்றார் மெஸ்ஸி.
1. ஒரு வேளை உலக கோப்பையை வாங்கியிருக்க கூடும்...
தனது இத்தனை ஆண்டு விளையாட்டு அணுபவத்தில் மெஸ்ஸி கைப்பற்றாத ஒரே கோப்பை என்றால் அது உலக கோப்பை ஆக தான் இருக்க முடியும். இந்த ஒரு கோப்பைக்காக தனது எல்லா சாதனைகளையும் விட்டுத் தர தயார் என பல முறை மெஸ்ஸி கூறியுள்ளார். 2014-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இறுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வியுற்றது அர்ஜெண்டினா. ஆனால் அவர் இளைஞராக இருந்த சமயத்தில் எடுத்த ஒரு முடிவை மாற்றி எடுத்திருந்தால் இன்று அவர் உலக கோப்பையை உச்சி முகர்ந்து தூக்கியிருக்கலாம். என்ன முடிவு அது?
13 வயதாக இருக்கும் போது பார்சிலோனா அணிக்காக விளையாட ஸ்பெயின் நாட்டிற்கு குடிபெயர்ந்தார் மெஸ்ஸி. அனைவரும் பார்சிலோனாவின் சொந்த மகனாகவே மெஸ்ஸியை பார்த்தனர். ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கூட மெஸ்ஸிக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்து, தான் எப்போதும் தனது நாடான அர்ஜெண்டினாவிற்கே விளையாடுவேன் என்றார். 2010-ம் ஆண்டு ஸ்பெயின் உலக கோப்பையை வென்றது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மெஸ்ஸியால் இன்று வரை ஒரு சர்வதேச கோப்பையை கூட வாங்க முடியவில்லை.