இந்த வார RAW வில் நுட்பமாக மூன்று விஷயங்களை நமக்குச் சொன்ன WWE(17/12/2018).

Who gets the keys to the kingdom?

WWE ன் போக்கு கடந்த சில வாரங்களாகவே மோசமாக உள்ளது. இதற்கு சான்றாக கடந்த சில வாரங்களில் நடைபெற்ற WWE RAW – வை சொல்லலாம். பேரோன் கார்பின் தலைமையில் நடந்த அனைத்து ஷோக்களும் மந்தமாகவே இருந்தன, காரணம் திரும்பத்திரும்ப நடத்தப்பட்ட ஒரே மாதிரியான நிகழ்வுகளால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பதே விளையாட்டு விமர்சகர்கள் உட்பட பலரது கருத்தாகும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முயற்சிகளால் WWE ஷோவானது அகலபாதாளத்திற்குச் சென்றது. இதனால் விரக்தி அடைந்த அந்நிறுவனம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர 2019 ல் தான் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வின்ஸ் மக்மஹோன் அவ்வளவு நீண்ட காலத்திற்கு தள்ளிப்போட முடியாது என்பதை மனதில் கொண்டு அதை சரிசெய்ய தானே களத்தில் இறங்கினார். இதற்குப் பிறகு விடுக்கப்பட்ட அறிக்கையில் WWE சேர்மனான வின்ஸ் மக்மஹோன் மீண்டும் WWEக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது ஆன்லைன் வேர்ல்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. வின்ஸ் மக்மஹோன் SMACKDOWN 1000 என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு டி.வி க்கு மீண்டும் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், வின்ஸ் அவருடைய நிறுவனத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியான XFL க்கு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. (XFL என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு அமெரிக்கன் கால்பந்து தொடராகும்). தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால் அந்த முடிவு சில காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவருடைய வருகையால் இன்னும் ஒருசில வாரங்களில் WWE RAW மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, மாறாக அடுத்து வரவிருக்கும் சம்மர் ஸ்லாம், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கட்டுரையில் இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்ட சில விஷயங்களைப் பற்றிக் காண்போம்.

#1. Fight for the keys to the kingdom.

Enter caption
Enter caption

வரும் வாரங்களில் வின்ஸ் மக்மஹோன் மன்டே நைட் ராவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் போலும், அதன் முன்னோட்டமாக இந்த வாரம் வின்ஸ் மற்றும் ஹெல்ம்ஸ்லி ரெஜைமி ஆகியோர் இணைந்து மீண்டும் WWE – ஐ தாங்களே வாங்கி விட்டதாக அறிவித்தார் வின்ஸ் மக்மஹோன். இதன்மூலம் டிஸ்னி நிறுவனம் WWE – வை சமீபத்தில் வாங்கி விட்டதாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

அத்தோடு மட்டுமல்லாமல், இனிமேல் நால்வர் மட்டுமே WWE UNIVERSE – ஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணியை செய்வார்கள் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் இம்முறை நிச்சயமாக WWE அடுத்த கட்டத்திற்கு செல்லும். அவ்வாறு ஏற்படின் அந்த நால்வரில் இரண்டு பேர் வின்ஸ் மற்றும் ஸ்டெப்பினி மக்மஹோன் ஆகியோர் இணைந்து தங்களுக்குத் தேவையான வீரர்களை தேர்வு செய்வார்கள். இதன் பிறகு இவர்கள் மீதமுள்ள இருவரின் அணியை வீழ்த்த வேண்டும் என்று முயற்சிப்பார்கள். மேலும் டிரிபிள் எச் மற்றும் ஷேன் மிக்மேன் ஆகியோருக்கிடையே சண்டை வைத்து யார் WWE ஹெட் குவாட்டர்ஸ்க்கு தலைவர் என்பதை முடிவு செய்வார்கள். இதன் மூலம் மீண்டும் WWE அனைத்து டிவி WRESTLING நிகழ்ச்சிகளையும் பின்னுக்குத்தள்ளும். இது நிச்சயமாக WWE ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

youtube-cover

#2. சர்ப்ரைஸ் என்ட்ரி இன் தி ராயல் ரம்பள்

youtube-cover

WWE இந்த வாரம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. அவற்றில் இரண்டு பேரின் ரிட்டர்ன் பற்றிய செய்தி இருந்தது. ஒன்று சமி ஸைன் மற்றும் கெவின் ஓவென்ஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து பின் பிரிந்து வெவ்வேறு ஷோக்களில் காயம் ஏற்பட்டு வெளியேறினர். ஆனால் இவர்கள் இருவருக்குமே காயம் ஏற்படுத்தியவர் பாபி லாஸ்லி.

ஆம், சமி ஸைன் money in the bank-ல் லாஸ்லியால் காயம் அடைந்தும், கெவின் ராவில் லாஸ்லியால் காயம் ஏற்பட்டும் வெளியேறினர். இவர்கள் இருவரும் குணமடைந்து வருவதால் கூடிய விரைவில் WWE – க்கு திரும்புவார்கள்.

அவர்கள் இருவரும் இல்லாதது WWE – க்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆம் இவர்கள் இருவரும் அனைத்து விதமான சண்டைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவந்தார்கள்.

அவர்கள் பங்கு பெறும் இரண்டு ஷோக்களிலும் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் கெவின் ஓவென்ஸ் தனது முதலாளியான ஷேன் மிக்மேன் உடன் சண்டையிட்டதைக் கூறலாம்.

#3. புதுவித கூட்டணிகளை உருவாக்குவது.

youtube-cover

மிகவும் வித்தியாசமான ஸ்டோரிலைன்களை அறிமுகப்படுத்துவதில் WWE-க்கு நிகர் யாருமில்லை. அவ்வாறு இதற்கு முன் பயன்படுத்திய கதைக்களங்களில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அதை தற்போதைக்கு ஏற்றாற்போல் இதுவரை மாற்றி அமைத்து வருகிறது WWE. ஆனால் தற்போது அப்படியில்லாமல் புதுவித முயற்சியை கையில் எடுத்துள்ளனர். ஆம் இதுவரை ஒன்றாக இருந்து வந்த டால்ஃப் ஜிங்லர் மற்றும் ட்ரு மேக்கன்டைர் ஆகியோரைப் பிரித்து இருவருக்கும் தனித்தனியாக வேறொரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது WWE. ட்ரு மேக்கன்டைர்-ஐ பேரோன் கார்பின் உடன் இணைத்துள்ளனர். இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெற போகிறது என்பதை விட இதனால் WWE TAG TEAM பகுதியில் புதுவித மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.