#2.காலின் முன்றோ:

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போலவே அடுத்த சீசனிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரதான தொடக்க பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா உள்ளார்கள். இதன் காரணமாக, ஜாசன் ராய் அல்லது காலில் முன்றோ ஆகியோரில் ஏதேனும் ஒரு வெளிநாட்டு வீரர் நிச்சயம் அணியில் இருந்து நீக்கப்படுவார். 2019 உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக விளையாடிய ஜேசன் ராய் அணியில் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவரை மாற்று வீரராக கருத்திற்கொண்டு காலின் முன்றோவை வெளியேற்றலாம்.
மறுபக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ள அணியாக உருவெடுக்க வேண்டும். கடந்த சீசனில் தொடர் முழுவதும் தடுமாறிய வாட்சன் பிளே ஆப் சுற்றில் மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளார். எனவே ஃபாப் டூபிளெசிஸ் உடன் களமிறங்கும் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சென்னை அணிக்கு தேவைப்படுகிறார். அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகத் திகழ்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரும் கடந்த சீசனில் போதிய பார்மின்றி தவித்ததால் தங்களது இடத்தை தற்போது இழந்துள்ளனர். கேதர் ஜாதவிற்கும் இதே நிலை தான் தொடர்கிறது. அணியில் பிரதான பேட்ஸ்மேனாக தோனி மட்டுமே இருப்பார் என்ற நிலைபாடு உள்ளது.
எனவே, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் முன்றோவை தமது அணியில் இணைத்து சில ஓவர்களில் பேட்டிங் செய்ய வைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க சென்னை அணி நிர்வாகம் முற்படலாம். ஏற்கனவே, கடந்த சீசனின் பவர் பிளே ஓவர்களில் மிகக்குறைந்த ரன்ரேட்டை கொண்டுள்ள அணிகளில் முதன்மை வகித்த சென்னை அணி, இம்முறையாவது பவர் பிளே ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் இவரை முன்னணி பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்களை குவிக்க ஏதுவாக அமையும்.