#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் ( 2010 ஆம் ஆண்டு )
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரவி பொப்பாரா மற்றும் இர்பான் பதான் ஆகிய இருவரும் களமிறங்கினர். இர்பான் பதான் 32 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் படேல் மற்றும் ஹைடன் ஆகிய இருவரும் களம் இறங்கினர். இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதுவும் குறிப்பாக பார்த்தீவ் படேல் 58 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் போட்டி டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஒவர்:
பஞ்சாப் அணியின் சார்பில் முத்தையா முரளிதரன், சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அல்பி மோர்கல் சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில், முதல் நான்கு பந்துகளிலேயே பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற்று விட்டது. சூப்பர் ஓவரில் மஹேலா ஜெயவர்த்தனே ஒரு சிக்சரும், யுவராஜ் சிங் ஒரு பவுண்டரியும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.