ஐபிஎல் 2019, KKR vs KXIP : கிங்ஸ் XI பஞ்சாப் அணி செய்த 3 தவறுகள்

Andrew Russel
Andrew Russel

2) மந்தீப் சிங்கின் பௌலிங்

No Option for Sixth Bowler
No Option for Sixth Bowler

12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது. இந்த இடத்தில் இது ஒரு நல்ல ரன்களகவே கொல்கத்தா அணிக்கு இருந்தது. நிதிஷ் ரானா மற்றும் ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிச்கிள் மற்றும் 2 ரன்களை மிடில் ஓவரில் அடித்து வந்தனர். இந்த நிலையில் பார்க்கும் போது கொல்கத்தா அணியை பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் 200 ரன்களுக்குள்ளே மடக்கி விடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரூன் சக்ரவர்த்தி தான் வீசிய முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். எனவே 20 ஓவரை முடிக்க 6வது பௌலர் ஒருவர் பஞ்சாப் அணிக்கு தேவைப்பட்டது.

மந்தீப் சிங்கை , ரவிச்சந்திரன் அஸ்வின் 6வது பௌலராக தேர்வு செய்தார். மந்தீப் சிங் ஐபிஎல் தொடரில் முதன் முதலாக பந்துவீச வந்தார். இவர் வீசிய வேகப்பந்து வீச்சு தவறான லைன் மற்றும் லென்த்தில் சென்றது. மந்தீப் சிங் தான் வீசிய ஓவரில் 18 ரன்களை வாரி இறைத்ததால் ஆட்டத்தின் போக்கு மாறியது.

ஒரு அனுபவ கிறிஸ் கெய்ல் இருக்கும் போது அஸ்வின், மந்தீப் சிங்கை 6வது பௌலராக தேர்வு செய்தது மிகவும் தவறான முடிவாகும். இவர் பந்துவீச்சிற்கு புது பௌலர் அல்ல. இவர் விளையாடிய அணிகளில் ஒரு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். கெய்ல் ஒரு அனுபவ மற்றும் பந்தை கணித்து வீசுவதில் வல்லவர்.

Quick Links