ஐபிஎல் 2019, KKR vs KXIP : கிங்ஸ் XI பஞ்சாப் அணி செய்த 3 தவறுகள்

Andrew Russel
Andrew Russel

3) 18வது ஓவரின் நோ-பால்

Ashwin seemed a bit confused
Ashwin seemed a bit confused

கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா மற்றும் உத்தப்பா சிறப்பான பார்ட்னர் ஷிப் செய்து அசத்தி வந்தனர். ராணா சிறந்த ஆட்டத்திறனுடன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு இவரது விக்கெட் தேவைப்பட்டது. மிடில் ஓவரில் சில மோசமான பந்துவீச்சு பஞ்சாப் பௌலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

16வது ஓவரில் ராணாவின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர்தான் ஆட்டம் மாறியது. 14வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 17 பந்துகளில் கொல்கத்தா அணியால் 15 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கொல்கத்தா அணியை 200 ரன்களை நெருங்க விடத அளவிற்கு பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசினர்.

ஆனால் ராணா விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கிய ஆன்ரிவ் ரஸல் பஞ்சாப் அணியின் அந்த கணவை களைத்தார். 18வது ஓவரை முகமது ஷமி வீசி முதல் 5 பந்தில் 1 பவுண்டரி மட்டுமே அளித்தார். 6வது பந்தில் ஆன்ரிவ் ரஸலை யார்கர் விட்டு போல்ட் சொய்தார் முகமது ஷமி.

ஆனால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் முகமது ஷமி அல்ல. பஞ்சாப் அணியின் ஃபீல்டர்கள் மூன்று பேர் மட்டுமே ஆடுகளத்தின் உள் வட்டத்தில் இருந்தனர். கிரிக்கெட் விதிப்படி 4 ஃபீல்டர்கள் உள் வட்டத்தில் இருக்க வேண்டும். எனவே அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ரஸல் அடுத்த 11 பந்துகளில் 42 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் ஆட்டம் முழுவதுமாக கொல்கத்தா வசம் மாறியது.

Quick Links