மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற மார்ச் 28 அன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சந்திக்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஆடும் XI-ஐ சற்று வேறுபாட்டுடன் மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்திருந்தனர். இஷான் கிசானிற்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்யப்பட்டிருந்தார். யுவராஜ் சிங் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் விளாசினார். அத்துடன் மயன்க் மார்கண்டே-விற்கு பதிலாக 17வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஸிக் சலாமை ஆடும் XI-ல் தேர்வு செய்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர்கள் மிகவும் மோசமாக சொதப்பினர். இவர்களது பந்துவீச்சை ரிஷப் பண்ட் தெறிக்கவிட்டார்.
விராட் கோலி-யின் தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ளும்போது ஆடும் XI-ல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பௌலிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. டெத் ஓவரில் ஜாஸ்பிரிட் பூம்ரா-வுடன் மற்றொரு சிறந்த பந்துவீச்சாளரை தேர்வு செய்து வீச வைக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாகும்.
இதனை கருத்தில் கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI நாம் இங்கு காண்போம்.
#1 தொடக்க வரிசை வீரர்கள்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவின்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் போட்டியில் 14 ரன்களை மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா-வின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருத்தல் வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் டிகாக் அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தினார். ஆனால் வெகுநேரம் வெளிபடுத்த தவறி விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த சர்வதேச தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை கொண்டு திகழ்கிறது. பெங்களூரு அணியுடனான போட்டியில் கண்டிப்பாக இவர்கள் இருவரும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர்-3 பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக இவர் களமிறங்கினார். பெங்களூரு அணியுடனான போட்டியிலும் இதே வரிசையில் மீண்டும் களமிறக்கப்படுவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் இவர் ரன் அவுட் செய்யப்பட்டார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.