ஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்

The Delhi Capitals are in contention for a spot in the playoffs in IPL 2019
The Delhi Capitals are in contention for a spot in the playoffs in IPL 2019

#3.மும்பை இந்தியன்ஸ்:

The Mumbai Indians need 2 wins in 4 matches to make it to the playoffs
The Mumbai Indians need 2 wins in 4 matches to make it to the playoffs

மும்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமை பெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று நான்கில் தோல்வியுற்றது. புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாம் இடம் வகித்து வருகிறது, மும்பை அணி. பேட்டிங் பவுலிங் என சரிசம பங்குடன் விளங்கும் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சான 6 / 12 என்றதை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் தொடர்ச்சியான ரன்களை குவித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், ஹர்திக் பாண்டியா பின் கள பேட்ஸ்மேனாக களம் புகுந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வருகிறார். பவுலிங்கில் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் எதிரணி வீரர்களின் விக்கெட்களை விரைவிலேயே வீழ்த்தி வருகின்றனர். பந்துவீச்சில் கூடுதல் பலமாக ராகுல் சாகர் தனது அபாரமான சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டி வருகிறார். எனவே, மேற்கூறிய காரணங்களால் இந்த அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

#4.கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

The Kings XI Punjab are playing an exciting brand of cricket in IPL 2019
The Kings XI Punjab are playing an exciting brand of cricket in IPL 2019

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தொடர்ந்து கலக்கி வருகின்றனர். இருப்பினும், உலக கோப்பை தொடங்க உள்ள காரணமாக இங்கிலாந்து அணிக்கு திரும்ப உள்ளார், தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ. மிடில் ஆர்டர் வரிசையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் இந்த அணியில் யார் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த தொகுப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நான்காம் இடம் வகிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் தொடர்ந்து தனது அபாரமான பார்மை நிரூபித்து வருகின்றனர். கேப்டன் அஸ்வினும் பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்த அணி முன்னேறும்.

Quick Links