இந்தியன் பிரீமியர் லீக்-கின் அடுத்த சீசனுக்கு 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களது அணியை தயார் படுத்தும் விதமாக தங்களுக்குள்ளாக வீரர்களை பரிமாற்றம் செய்து வருகின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் முதல் பரிவர்த்தனையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மயான்க் மார்கன்டேவை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்துவிட்டு அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் ஷேர்ஃபேன் ரூதர்போர்ட்-டை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது.
மயான்க் மார்கன்டேவிற்கு 2018 ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடர் முற்றிலும் மோசமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லெக் ஸ்பின்னராக ராகுல் சகார் கிடைத்த காரணத்தால் மயான்க் மார்கன்டேவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மறுமுனையில் ஷேர்ஃபேன் ரூதர்போர்ட் மிகவும் அதிரடி ஆட்டக்காரர் இருப்பினும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளைப் போலவே மற்ற அணிகளும் 2019 ஐபிஎல் தொடரில் சொதப்பிய வீரர்களை விடுவித்து சில புது முகங்களை அணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் அணிகளில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடும் XIல் இடம்பெற முடியும் என்ற காரணத்தால் சில வீரர்களை இறுதிவரை பயன்படுத்த முடியாமலேயே போகிறது. ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்காக கடந்த சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை வெளியேற்றிவிட்டு, கடந்த சீசனில் தாங்கள் செய்த தவற்றை கழையும் திறமையுள்ள வீரர்களை அணியில் களமிறக்க முயற்சி செய்துவருகிறது.
நாம் இங்கு 2020 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பரிமாற்றம் செய்யப்பட உள்ள 5 வீரர்களைப் பற்றி காண்போம்.
#5 சிவம் தூபே - மும்பை இந்தியன்ஸ்
2019 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பாக சிவம் தூபே மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான இவர் அதிரடி ஹீட்டிங் பேட்டிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வெளிபடுத்தி ஐபிஎல் தொடரில் தன் பெயரை பதிவு செய்து தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவம் தூபே பெங்களூரு அணிக்காக ரன் குவிக்க மிகவும் மோசமாக தடுமாறினார். 4 போட்டிகளில் பங்கேற்ற இவர் 40 ரன்கள் மட்டுமே அடித்தார். பௌலிங்கில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்த சீசனில் சிவம் தூபே-வை அணியிலிருந்து விடுவிக்கும் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் ஏலத்தில் சிவம் தூபே-வை எடுக்க முயற்சித்தது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர் சிவம் தூபே-வை அணியிலிருந்து வெளியேற்றினால் கண்டிப்பாக தற்போதைய ஐபிஎல் சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இனைத்துக் கொள்ளும். சிவம் தூபே தற்போது இந்தியா-ஏ அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வரும் நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் மிகுந்த நம்பிக்கையுடன் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்துவார்.