ஐபிஎல் போட்டிகள் தொடங்கி இந்நாள்வரை மொத்தம் 19 முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பந்துவீச்சாளர்கள் உண்டு. முதன்முதலாக இந்த சாதனையை புரிந்தவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சோஹைல் தன்வீர். ஜேம்ஸ் பாக்னர் மற்றும் ஜெய்தேவ் உனக்கும் ஆகிய இருவரும் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் ஆவர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இருமுறை 5 விக்கெட்களை ஜேம்ஸ் பால்க்னர் கைப்பற்றியுள்ளார். உனத்கட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒருமுறையும் ரைசிங் புனே சூப்பர் கிங்ஸ் அணிக்காக மற்றொரு முறையும் 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் ஆவர். மேலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் நான்காவது சீசனில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய தொடராக அமைந்தது. அத்தொடரில் மொத்தம் நான்கு முறை வெவ்வேறு பந்து வீச்சாளர்களால் இந்த 5 விக்கெட் சாதனை எடுக்கப்பட்டது.ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 5 சிறந்த பந்துவீச்சு சாதனைகளைப் பற்றி இங்கு தொகுத்துள்ளேன்.
#5.லசித் மலிங்கா (5/13):
ஐபிஎல் தொடரின் நான்காவது சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மலிங்கா வீசிய 3.4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் உட்பட 13 ரன்களே வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார் . டேவிட் வார்னர், உன்முகுந் சந்த், வேணுகோபால் ராவ், மோர்னே மோர்கல் மற்றும் அசோக் திண்டா ஆகியோர் இவரது பந்துவீச்சுக்கு இரையானார்கள். இவர் கைப்பற்றிய 5 விக்கெட்களில் 4 விக்கெட்கள் ஸ்டெம்பை பதம் பார்த்தன. மேலும், ஒரே ஓவரில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது அபார பந்துவீச்சு தாக்குதலால் டெல்லி அணி 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தாரைவார்த்தது. பின்னர், விளையாடிய மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு சுலபமாக வெற்றியை கண்டது.
மேலும், மலிங்காவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. மேலும், இவரே ஐபிஎல் தொடரின் நான்காவது சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
#4 .இஷாந்த் ஷர்மா (5/12):
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் நான்காவது சிறந்த பந்துவீச்சு சாதனையை கொண்டுள்ளார், டெல்லி நாயகன் இசாந்த் சர்மா. ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் கொச்சி டஸ்கர்ஸ் அணியும் ஒருசில ஆண்டுகள் ஒரு அங்கமாக இருந்து வந்தன. டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சேர்ந்த இஷாந்த் சர்மா, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்களை கைப்பற்றி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது சிறந்த ஐபிஎல் பந்து வீச்சினை பதிவு செய்தார். ஆட்டத்தின் முதலாவது பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் இஷாந்த்.
இஷாந்த் சர்மாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 74 ரன்களில் ஆல் அவுட் ஆகினர். மஹேல ஜெயவர்த்தனே, பார்த்தீவ் பட்டேல், பிராட் ஹாட்ஜ் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய முக்கிய விக்கெட்களை கைப்பற்றி, தனது அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியதோடு மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும், அந்த நான்காவது ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 விக்கெட்களை கைப்பற்றினார்
#3.அனில் கும்ப்ளே (5/5):
2009ம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சினை அளித்திருந்தார், இந்திய சுழற்பந்து நாயகன் அனில் கும்ப்ளே. 3. 1 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் ஓவர் உட்பட 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இவரது பந்துவீச்சு எகானமி 1.57 என்ற வகையில் அமைந்தது. ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டை கைப்பற்றிய வேறு எந்த பந்து வீச்சாளரும் இவருக்கு குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை. இப்போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரின் அபார பந்துவீச்சு தாக்குதலால் 58 ரன்களில் சுருண்டது. இந்த ஆட்டத்தில் 67 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதன் காரணமாக கும்ப்ளேவுக்கு வழங்கப்படவில்லை.
இவரின் பந்துவீச்சில் யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வார்னே, முனாஃப் பட்டேல் மற்றும் கம்ரன் கான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 2009 ஐபிஎல் சீசனில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாமிடம் வகித்தார். மேலும், இவரது பந்துவீச்சு அத்தொடரின் சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.
#2.ஆடம் ஜாம்பா (6/19):
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 6 விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தவர், ஆடம் ஜாம்பா. இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜென்ஸ் அணிக்காக இடம் பெற்றிருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இவரது பந்துவீச்சு எகானமி 4.75 என்ற வகையில் அமைந்தது. இவரது பந்துவீச்சில் கனே வில்லியம்சன், யுவராஜ் சிங், ஹென்றிக்ஸ், தீபக் ஹூடா, நமன் ஓஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தங்களது விக்கெட்களை இழந்தனர். என்னதான் இவர் எதிரணியை 137 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை இவரால் தடுக்க இயலவில்லை.
இருப்பினும், இவரது அபார பந்து வீச்சால் இவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. 6 விக்கெட்களை கைப்பற்றிய இவரது பந்துவீச்சு தோல்வியுற்ற அணிகளின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது. மேலும், அந்த தொடரின் வெறும் 5 போட்டிகளில் விளையாடிய ஜாம்பா 12 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
#1.சோஹைல் தன்வீர் (6/14):
ஐபிஎல் வரலாற்றில் 6 விக்கெட்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஐபிஎல்லின் தொடக்க தொடரிலே படைத்திருந்தார், பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் சோஹைல் தன்வீர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அபார பந்துவீச்சு தாக்குதலால் நிலை குலைய வைத்தார். 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார், தன்வீர். பார்த்தீவ் பட்டேல், அல்பி மோர்கல், சிவராமகிருஷ்ணன், பிளம்பிங், முரளிதரன், மக்கையா நிட்டினி விக்கெட்டுகளை சாய்த்தார்.
இவரது சிறப்பான பவுலிங் தாக்கத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இவரது பந்துவீச்சு முக்கியமான காரணியாகும். மேலும், இவரே போட்டியின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 2008 ஐபிஎல் சீசனில் 22 விக்கெட்களைச் சாய்த்து தொடரின் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.