7வது ப்ரோ கபடி சீசன் ஜீலை 20 அன்று ஹைதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 5வது களமாக சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானம் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் சென்னை களத்தில் சொதப்பி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பெங்களூரு புல்ஸ் (32-21), ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் (28-26), யு மும்பா (29-24) ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ், அனுப் குமார் தலைமையிலான புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31-31 என சமன் செய்தது. தமிழ் தலைவாஸ் தனது சொந்த களத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றியை இந்த சீசனில் ருசிக்கவில்லை.
பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டைச் சேர்ந்த அணியான தமிழ் தலைவாஸ் அணிக்கு கடந்த காலங்களில் ஒரு தூணாக விளையாடிய மன்ஜீத் சில்லருக்கு இப்போட்டியில் முழங்கையில் அடிபட்டது. இதனால் சென்னை களத்தில் நடந்த மற்ற போட்டிகளில் மன்ஜீத் சில்லர் பங்கேற்கவில்லை.
சென்னை களத்தில் நடந்த போட்டிகளில் சில சர்ச்சைக்குரிய முடிவுகளும் நடுவரால் வழங்கப்பட்டது. பெரும்பாலும் இக்களத்தில் நடந்த அனைத்து போட்டிகளும் இறுதி நிமிடம் வரை பரபரப்பாக சென்றது குறிப்பிடத்தக்கது. ப்ரோ கபடி லீக்கின் நட்சத்திர வீரர் பவான் ஷெராவத் சென்னை களத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தார். பச்சை நிற பட்டைக்கு சொந்தக்காரரான இவர் இதுவங 103 ரெய்ட் புள்ளிகளை வென்றுள்ளார்.
மறுமுனையில் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியின் சந்தீப் தல் 33 டேக்கல் புள்ளிகளை சென்னை களத்தில் வென்று அசத்தியுள்ளார்.
சில இளம் வீரர்கள் தங்களது கடின உழைப்பால் சென்னை களத்தில் ரசிகர்களையும், கபடி வள்ளுநர்களையும் கவர்ந்துள்ளார். நாம் இங்கு 2019 ப்ரோ கபடி சீசனில் சென்னை களத்தில் நடந்த போட்டியில் கலக்கிய 3 இளம் வீரர்களைப் பற்றி காண்போம்.
#3 சவுரப் நதால் - பெங்களூரு புல்ஸ் (டிபென்டர்)
சவுரப் நதால் பெங்களூரு புல்ஸ் அணிக்காக தனது முதல் அறிமுக போட்டியில் ஒரு மாற்று வீரராக களம் கண்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தனது டிபென்டிங் திறனை ரசிகர்கள் முன்னிலையில் வெளிபடுத்தினார்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் சவுரப் நதாலின் நாட் அவுட் சதவீதம் 100 ஆகும். இப்போட்டியில் ஹை 5 புள்ளிகளை வென்ற சவுரப் நதால் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சிறந்த டிபென்டருக்கான பரிசையும் வென்றார்.
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு புல்ஸ் அணியில் முன்னணி வீரராக திகழும் ஆஸிஸ் குமார் தற்போதைய சீசனில் சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. இவரது இடத்தை சவுரப் நதால் ஆக்கிரமித்துக் கொண்டார். மேலும் பெங்களூரு புல்ஸ் ரசிகர்களின் பிடித்தமான டிபென்டராகவும் சவுரப் நதால் வலம் வருகிறார்.