ஐபிஎல் போல அசுர வளர்ச்சியை எட்டியுள்ள "ப்ரோ கபடி லீக்"

Manjit chiller
Manjit chiller
Ajay Takur & Manjit chiller
Ajay Takur & Manjit chiller

மன்ஜீட் சில்லர் இந்திய கேப்டன் அஜய் தாகூருடன் சிறப்பான பார்டனர்ஷீப் அமைத்து விளையாடி வருகிறார். இருவரும் மொத்தமாக 6 ப்ரோ கபடி சீசனில் 5 சீசனில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர். இவர்கள் விளையாடும் அணியின் பலமாக இருவரும் திகழ்கிறார்கள். இருவரும் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் அணியில் இனைந்து விளையாடியுள்ளனர். தற்போது தமிழ் தலைவாஸ் அணியில் கடந்த இரு சீசன்களாக விளையாடி வருகின்றனர்.

இவர்கள் இருவரது நட்பு குறித்து மன்ஜீட் சில்லர் கூறியதாவது,

"நாங்கள் இருவரும் முதல் ப்ரோ கபடி சீசனிலிருந்தே ஒரே அணியில் விளையாடி வருவதால் எங்களுக்குள் நல்ல புரிதல் உணர்வு உள்ளது. அஜய் தாகூரின் மனநிலை எனக்கு நன்றாக தெரியும். என்னுடைய மனநிலை அவருக்கு நன்றாகத் தெரியும். இந்த புரிதல் உணர்வு நாங்கள் விளையாடிய முதல் சீசனிலிருந்து தற்போது வரை எங்களுக்குள் உள்ளது".

கடந்த சீசனில் மன்ஜீட் சில்லர் 19 போட்டிகளில் பங்கேற்று 59 டேகல் புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அந்த சீசனின் இரண்டாவது மோசமான அணியாக தமிழ் தலைவாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் பிரிவு-B ல் இடம்பெற்றிருந்த தமிழ் தலைவாஸ் 22 போட்டிகள் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று 42 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. 5வது சீசனில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் தமிழ் தலைவாஸ் புள்ளிபட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதைப் பற்றி மன்ஜீட் ஜீல்லர் கூறியதாவது,

"கடந்த சில வருடங்களாக எனக்கு மோசமான சீசனாக அமைந்ததைப் பற்றி நான் தற்போது நினைக்கவில்லை. தனிநபராக நான் என்னுடைய ஆட்டத்திறனை அணிக்கு அளித்து வருகிறேன். கடந்த கால முடிவுகளைப் பற்றி தற்போது நினைத்து பார்ப்பது தவறு. அந்த நேரத்தில் வீரர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலை எவ்வாறு உள்ளதோ அதுதான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கிறது. ஒரு அணியின் தூண்களாக திகழும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அந்த அணி கடுமையாக தடுமாறும்."

இந்தியாவின் பிறப்பிடமாக கொண்ட கபடி விளையாட்டிற்கு ஆரம்பத்தில் அதிக தொகைக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதில்லை‌. மன்ஜீட் சில்லர் 75.5 லட்சத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது புரோ கபடி லீக் வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ச ஒப்பந்த தொகையாக இருந்தது. ஆனால் 2018 ஏலத்தில் 6 கபடி வீரர்கள் ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்‌. சித்தார்த் தேசாய் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக 1.45 கோடிக்கும், நிதின் தொமார் 1.20 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டதே அந்த சீசனின் அதிக பட்ச தொகையாக ஒரு வீரருக்கு வழங்கப்பட்டது.

ப்ரோ கபடி லீக் ஐபிஎல் தொடரின் நுணுக்கத்தை கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் மற்றும் விளம்பரதாரர்களின் வருமானம் ஆகியவற்றால் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 7வது ப்ரோ கபடி சீசன் 132 லீக் போட்டிகளை கொண்ட 3 மாத தொடராகும். அத்துடன் 5 பிளே ஆஃப் உடன் அக்டோபர் 19ல் இறுதிப்போட்டி நடைபெறும். கபடி தொடர் 3 மாதங்கள் கொண்டதாக இருப்பதால் வீரர்கள் தங்களுக்கு தேவையான ஓய்வை வாரத்திற்கு வாரம் எடுத்துக் கொண்டு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil